கும்பகோணம்: ஓட்டுநர் ஒருவர் கரோனா காலத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு சிகிச்சையளித்துக் காப்பாற்றிய அரசு மருத்துவருக்கு நடந்த பாராட்டு விழாவில், அதை நினைவுகூர்ந்து கண்ணீர்மல்க நன்றி தெரிவித்த நெகிழ்வான சம்பவம் கும்பகோணத்தில் நடந்தது.
திருவாரூர் மாவட்டம், அடவன்குடியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக உள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு ஏற்பட்ட கரோனா தொற்று காரணமாக முழு அடைப்பு அமலில் இருந்தது. அப்போது, கண்ணனின் தாயாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவதிப்பட்டதால், பல்வேறு தனியார் மருத்துவமனைகளை தொடர்புகொண்டு தாயாரை சிகிச்சைக்கு அனுமதிக்க உதவி கேட்டார். அதற்கு அவர்கள், பல லட்சம் ரூபாய் செலவாகும் எனக் கூறினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MgfpwCV
via IFTTT