சென்னை, கொரட்டூர் டிஎன்எச்பி குடியிருப்பு 47-வது தெருவில் ஓம்சக்தி நாகவல்லி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் புற்றும், வேப்பமரமும் மட்டும் அமைந்திருக்க, நாகவல்லியை இங்கு பிரதிஷ்டை செய்து, பக்தர்கள் வழிபட, நற்காரியங்கள் கைகூட, கோயிலாக உருபெற்று, அம்மன் இங்கு அருள்பாலிக்கிறார்.
வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தரும் நாகவல்லி அம்மனிடம் குழந்தை வரம், திருமண வரம் வேண்டி வந்து, அப்பலன் பெற்றுச் செல்வோர் உண்டு. 1,500 பேர் பால்குடம், 600 பேர் தீ மிதித்தல் என ஆடி மாத இரண்டாவது வார திருவிழா இந்த நாகவல்லி அம்மன் கோயிலில் களை கட்டுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fgWBAwG
via IFTTT