89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்புக்காக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விருதுநகர் முதியவர்!

பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்புக்காக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விருதுநகர் முதியவர்!

விருதுநகர்: மாணவ, மாணவிகள் பள்ளி செல்லும் நேரத்தில் அவர்களுக்காக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியை 23 ஆண்டுகளாகச் செய்து வருகிறார் விருதுநகரைச் சேர்ந்த முத்துப்பாண்டி (69). விருதுநகர் சிவந்திபுரம் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. கட்டில், சேர்களுக்கு வயர் பின்னிக் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

தனது அன்றாடப் பணியோடு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை, மாலை நேரத்தில் விருதுநகர் நகராட்சி அலுவலகச் சாலை சந்திப்பில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இப்பகுதியில் சத்ரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அண்ணா மலையம்மாள் நடுநிலைப் பள்ளி, ஆர்.சி. நடுநிலைப் பள்ளி, மாங்கா மச்சி நடுநிலைப் பள்ளி, பி.எஸ்.சி. தொடக்கப் பள்ளி, சுப்பிரமணியம் தொடக்கப் பள்ளி, சரஸ்வதி தொடக்கப் பள்ளி ஆகிய 7 பள்ளிகள் அருகருகே உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KxiJj8M
via IFTTT