89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : எஸ்.புதூர் அருகே ஆடி படையல் விழா: மேலாடையின்றி பொங்கல் வைத்து 1,000 கிடாய்கள் வெட்டி வழிபாடு

எஸ்.புதூர் அருகே ஆடி படையல் விழா: மேலாடையின்றி பொங்கல் வைத்து 1,000 கிடாய்கள் வெட்டி வழிபாடு

சிங்கம்புணரி: எஸ்.புதூர் அருகே 27 ஆண்டுகளுக்கு பின் நடந்த ஆடி படையல் விழாவில் ஆண்கள், பெண்கள் மேலாடையின்றி பொங்கல் வைத்தும், 1,000 கிடாய்கள் வெட்டியும் வழிபாடு செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கிழவயல் வனப்பகுதியில் சங்கிலி கருப்பர் கோயில் உள்ளது. இங்கு கிழவயல், மணியாரம்பட்டி, பொன்னடப்பட்டி , அம்மன்குறிச்சி உள்ளிட்ட பகுதி மக்கள் வழிபாடு செய்கின்றனர். விவசாயம் செழிக்க, நோயின்றி வாழ 27 ஆண்டுகளுக்கு பின்னர் அவர்கள் ஆடி படையல் விழாவை நடத்த முடிவு செய்தனர். அதன்படி, கடந்த மாதம் வெள்ளையம்மன் கோயிலில் இருந்து சாமியாடிகள் கரகம் எடுத்து ஒவ்வொரு ஊராகச் சென்று அருள்வாக்கு கூறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OHKaRel
via IFTTT