தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் அரச குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த அழகிய கட்டுமானங்களைக் கொண்ட கிணறு கண்டறியப்பட்டது. தஞ்சாவூரை சோழர், நாயக்க மன்னர்களைத் தொடர்ந்து மராட்டியர்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களது காலத்தில் 110 ஏக்கரில் அரண்மனை கட்டப்பட்டது. இந்த அரண்மனையில் அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட தர்பார் மகால், ஆயுத கோபுரம், மணி கோபுரம், சார்ஜா மாடி ஆகியவை மன்னர்களின் நேரடி பார்வையில் பராமரிக்கப்பட்டு வந்தன. மராட்டியர்களுக்கு பின்னர் வந்த ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் இந்த அரண்மனை பாதுகாக்கப்பட்டது. தற்போது, அரண்மனை வளாகத்தில் மராட்டிய மன்னர்களின் வம்சத்தினர் வசித்து வருகின்றனர்.
அரண்மனை வளாக கட்டிடம் 100 ஆண்டுகளுக்கு மேலானதாக உள்ளதால், இதை தமிழக தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்து, பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அதை புனரமைப்பு செய்து வருகிறது. இதன்படி, ரூ.25 கோடியில் தர்பார் மகால், சார்ஜா மாடி, மணி கோபுரம், ஆயுத கோபுரம் ஆகியவை புனரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், மராட்டியர்களின் வம்சத்தினர் தங்கியுள்ள பகுதிகளும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரண்மனை வளாகத்தின் உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் பழமையான அழகிய கட்டுமானங்களைக் கொண்ட கிணறு கண்டறியப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yW2ZuvJ
via IFTTT