திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் ஆடி அஸ்வினியுடன் ஜூலை 27-ம் தேதி (இன்று) ஆடிக் கிருத்திகை திருவிழா தொடங்குகிறது. இத்திருவிழாவுக்காக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 560 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் இந்தாண்டுக்கான ஆடிக் கிருத்திகை திருவிழா இன்று தொடங்குகிறது. ஜூலை 31-ம் தேதி வரை, 5 நாட்கள் நடைபெற உள்ள இந்த திருவிழாவில், இன்று ஆடி அஸ்வினி திருவிழாவும், நாளை (ஜூலை 28-ம் தேதி) ஆடி பரணி திருவிழாவும் நடைபெற உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EW4fcPL
via IFTTT