‘சேலம் மாநகரின் காவல் தெய்வம்’ என பக்தர்களால் போற்றி வணங்கப்பட்டு வரும் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில், திருமணிமுத்தாறு நதிக்கரையின் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ளது. பழங்காலத்தில், பாதுகாக்கப்பட்ட கோட்டையாக இருந்த இடத்தில், அம்மன் வீற்றிருக்க, கோட்டைக்கு வெளியே வசிக்கும் பாமர பக்தர்கள், கோட்டைக்குள் எளிதில் வந்து, வழிபட முடியாமல் தவித்தனர்.
பக்தர்களின் குறையை அறிந்தவளான பெரிய மாரியம்மன், கோட்டைக்கு வெளியே வந்து, சின்னக்கடை வீதி என்னும் இடத்திலும் குடி கொண்டு, பாமர பக்தர்களுக்கும் தாயாகி அருள்பாலிக்க, இங்குள்ள அம்மனுக்கு, ‘சின்ன மாரியம்மன்’ என்ற பெயர் வழங்கலாயிற்று.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aA6LyX
via IFTTT