89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சாலை வசதி இல்லாததால் 14 கிமீ தூரம் தந்தையை கட்டிலில் சுமந்து மருத்துவமனையில் சேர்த்த மகன்

சாலை வசதி இல்லாததால் 14 கிமீ தூரம் தந்தையை கட்டிலில் சுமந்து மருத்துவமனையில் சேர்த்த மகன்

கட்சிரோலி: சாலை வசதி இல்லாததன் காரணமாக, காயமுற்ற தந்தையை கட்டிலில் தூக்கியபடி 14 கி.மீ.நடந்து சென்று மகன் மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலியில் உள்ள பழங்குடி கிராமம் பட்பர். பழங்குடி இனத்தைச் சேர்ந்த மல்லு மாஜ்ஜி (67) வியாழக்கிழமை தன் பண்ணையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமானது. ஆனால்,மருத்துவமனை அந்த கிராமத்திலிருந்து 14 கிமீ தொலைவில் இருந்தது. அந்த கிராமத்திலிருந்து மருத்துவமனைக்குச் செல்ல எந்த வசதியும் கிடையாது. நடந்துதான் செல்ல வேண்டும். தவிர, இடையே வரும் ஆற்றையும் கடந்து செல்ல வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/If4pUSB
via IFTTT