89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வைஷ்ணவி தேவி கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

வைஷ்ணவி தேவி கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரியாசி மாவட்டம் திரிகுடா மலை உச்சியில் புகழ்பெற்ற மாதா வைஷ்ணவி தேவி கோயில் உள்ளது.

கோயில் வாரிய உயர் அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “இந்த ஆண்டில் கடந்த டிசம்பர் 6-ம் தேதி வரையில் 86.4 லட்சம் பக்தர்கள் மாதா வைஷ்ணவ தேவியை தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும். சராசரியாக தினமும் 13 ஆயிரம் பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். புத்தாண்டு வர உள்ளதால் இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும். இதனால் இந்த மாத இறுதியில் மொத்த பக்தர்கள் எண்ணிக்கை 90 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rv2Z3lL
via IFTTT