89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ராணிப்பேட்டை மாவட்ட அளவில் கலை நன்மணி விருது பெற்று மணல் சிற்ப கலையில் அசத்தி வரும் ஓவிய ஆசிரியர்

ராணிப்பேட்டை மாவட்ட அளவில் கலை நன்மணி விருது பெற்று மணல் சிற்ப கலையில் அசத்தி வரும் ஓவிய ஆசிரியர்

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சாஸ்திரி நகைரச் சேர்ந்த ஆர்.சாமுவேல் (58), தனியார் பள்ளி ஓவிய ஆசிரியர். இவர், மணல் சிற்ப கலையில் அசத்தி வருகிறார். இவர், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற மணற் சிற்ப கலைஞரனான ‘சுதர்சன் பட்நாயக்கிடம்’ இதற்கான பயிற்சிகளை பெற்றவர்.

சமீபத்தில் ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் நடைபெற்ற சர்வதேச மணற் சிற்ப கலைஞர் களுக்கான போட்டியில் ஆர்.சாமுவேல், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பாலாஜி வரபிரசாத் என்பவருடன் சேர்ந்து, தமிழக பாரம்பரியமான பொங்கல் பண்டிகை மற்றும் வீரத்தின் அடையாளமான ஜல்லிகட்டு குறித்தும், உலக அமைதிக்காக தத்ரூப மான மணல் சிற்பத்தை வடிவமைத்தனர். இந்த மணல் சிற்பம் அங்கு வந்த உள்நாடு, வெளிநாடு உட்பட இரண்டரை லட்சம் பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2oNRekE
via IFTTT