89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மதுரை | சமையல் தொழிலில் ஈட்டும் வருவாயில் ஏழைகளுக்கு தினமும் உணவளிக்கும் லூர்து மேரி!

மதுரை | சமையல் தொழிலில் ஈட்டும் வருவாயில் ஏழைகளுக்கு தினமும் உணவளிக்கும் லூர்து மேரி!

மதுரை: சமையல் தொழில் மூலம் கிடைக்கும் வருவாயில் மதுரை வைக்கம் பெரியார் நகர் லூர்து மேரி தினமும் ஏழைகளுக்கு உணவளிக்கிறார். கரோனா நேரத்தில் களமிறங்கி தொடரும் அவரது சேவையை மக்கள் பாராட்டியுள்ளனர்.

மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா சாமநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட வைக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் லூர்து மேரி. இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். மதுரை மாநகருக்கு மிக அருகிலுள்ள வைக்கம் பெரியார் நகர் பகுதியில், குண்டும், குழியுமான ரோடு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் குறைவால் மக்கள் படும் கஷ்டங்களை அறிந்த லூர்து மேரி, தனது சொந்த செலவில் கட்டிட கழிவுகளை விலைக்கு வாங்கி, அவற்றை குண்டு, குழியுமான ரோடுகளை நிரப்பி சீரமைக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BseJP4H
via IFTTT