89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக தயாராகும் சுடுமண் விளக்குகள்: வெளி மாநிலங்களில் இருந்து குவியும் ஆர்டர்கள்

கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக தயாராகும் சுடுமண் விளக்குகள்: வெளி மாநிலங்களில் இருந்து குவியும் ஆர்டர்கள்

திண்டுக்கல்: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் அருகே சுடுமண்ணால் தயாரிக்கப்படும் விளக்குகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. இதனால், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் குவிகின்றன.

நாடு முழுவதும் கார்த்திகை தீபத்திருவிழா இந்த ஆண்டு டிச.6-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கு முன்னதாகவே ஒரு வாரம் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகளால் விமரிசையாக கொண்டாடப்படவில்லை. இதனால் விளக்கு தயாரிப்போர் தயார் செய்தும் விற்பனைக்கு அனுப்பமுடியாதநிலையில் பாதிப்பு ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qSneIOE
via IFTTT