89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வரும் 8-ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடல்

வரும் 8-ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடல்

திருமலை: வரும் 8-ம் தேதி சந்திர கிரகணம் நிகழ்வதை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில், 12 மணி நேரம் நடை சாத்தப்பட உள்ளது.

சந்திர கிரகணம் வரும் 8-ம் தேதி மதியம் 2.39 மணிக்கு தொடங்கி, மாலை 6.19 வரை நடைபெற உள்ளதால், திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட அனைத்து திருப்பதி தேவஸ்தான கோயில்களும் அன்றைய தினம் காலை 8.40 மணிக்கு மூடப்பட்டு, இரவு 7.20 மணிக்கு திறக்கப்பட உள்ளது. அதன் பின்னர் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்ட பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mPKDoB4
via IFTTT