மதுரை: புத்தகங்களை வாசிப்பை நேசித்தபடியே பயணிக்க, வசதியாக வெகுதூர ரயிலில் நூலகம் என்ற புதிய திட்டத்தை முதன்முறையாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.
பொதுவாக வெகுதூர ரயில்களில் பயணம் என்றாலே வாசிப்பை நேசிக்கும் பயணிகள் தங்களின் பயண களைப்பை போக்கும் விதமாக வார, மாத இதழ்களை வாங்கிக் கொண்டு, பயணிக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. அதிகாலை, மாலை நேரங்களில் பெரிய ரயில் நிலையங்களில் நாளிதழ், மாலை இதழ்கள் விற்பது இன்றைக்கும் வழக்கம். மேலும், ஒவ்வொரு பெரிய ரயில் நிலையத்திலும் புத்தகம், இதழ்கள், பத்திரிகை விற்பனைக்கென்றே ஒரு கடையும் ஒதுக்கப்படுவது உண்டு.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mwo2QGT
via IFTTT