89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : குறைமாத குழந்தைக்கு பெற்றோரின் அரவணைப்பே சக்தி வாய்ந்த சிகிச்சை: சிறப்பு மருத்துவர் கருத்து

குறைமாத குழந்தைக்கு பெற்றோரின் அரவணைப்பே சக்தி வாய்ந்த சிகிச்சை: சிறப்பு மருத்துவர் கருத்து

புதுக்கோட்டை: உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நவ.17-ம் தேதி, குறைமாத குழந்தைகள் விழிப்புணர்வு நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு இந்த தினத்துக்கான கருப்பொருள் ‘பெற்றோரின் அரவணைப்பு- ஒரு குறைமாத குழந்தைக்கு சக்தி வாய்ந்த சிகிச்சை’ என்பது ஆகும்.

இது குறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பச்சிளங் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு மருத்துவர் ஆர்.பீட்டர், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: கர்ப்ப காலத்தில் 37 வாரங்கள் நிறைவடைவதற்குள் பிறக்கும் குழந்தைகள்தான் குறைமாத குழந்தைகள். பிறக்கும் குழந்தைகளில் 10 சதவீதம் குறைப் பிரசவத்தில்தான் பிறக்கின்றன. இந்தக் குழந்தைகள் எடை குறைவாக இருக்கும். சுவாசக் கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நீண்ட நாட்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qXAzBe0
via IFTTT