89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சேலத்தில் புத்தகத் திருவிழா தொடங்கியது: 50,000 தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் குவிப்பு

சேலத்தில் புத்தகத் திருவிழா தொடங்கியது: 50,000 தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் குவிப்பு

சேலம்: சேலத்தில் புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது. வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில்புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் பேசியதாவது: சேலத்தில் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவில் பல்வேறு ஆளுமைகளின் திறமைகளை வெளிக் கொணரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஜனவரியில் உலக புத்தகத் திருவிழா நடத்திட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த புத்தக திருவிழாவை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/H2Wj86N
via IFTTT