89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சர்க்கரை நோயால் ஏற்பட்ட ஆறாத புண் - கோவை முழங்காலை அகற்றாமல் நோயாளியை காப்பாற்றிய இஎஸ்ஐ மருத்துவர்கள்

சர்க்கரை நோயால் ஏற்பட்ட ஆறாத புண் - கோவை முழங்காலை அகற்றாமல் நோயாளியை காப்பாற்றிய இஎஸ்ஐ மருத்துவர்கள்

கோவை: ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாததால் ஆறாத புண் ஏற்பட்டு, இடது முழங்காலை அகற்ற வேண்டிய நிலையில் இருந்த நோயாளிக்கு சிகிச்சை அளித்து கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (42). சர்க்கரை நோய் காரணமாக இவரது இடது காலில் புண் ஏற்பட்டு, தொற்று அதிகமானதால் முழங்காலுக்கு கீழ் வரை வெட்டி அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையை அணுகினார். அங்கு சிகிச்சைக்கு அதிக செலவாகும் என தெரிவிக்கப்பட்டதால், கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின் தற்போது காலை வெட்டி எடுக்க வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டு, அவர் நலமுடன் உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VG6c7Ai
via IFTTT