89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : விலை குறைவு... தரம் நிறைவு... - மதுரை மத்திய சிறைக் கைதிகள் தயாரிக்கும் தீபாவளி இனிப்பு, கார வகைகள்

விலை குறைவு... தரம் நிறைவு... - மதுரை மத்திய சிறைக் கைதிகள் தயாரிக்கும் தீபாவளி இனிப்பு, கார வகைகள்

மதுரை: மதுரை மத்திய சிறைக் கைதிகள் தீபாவளியை முன்னிட்டு தரமான, சுகாதாரமான முறையில் இனிப்பு, கார வகைகள் தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

மதுரை மத்திய சிறை நிர்வாகம் சார்பில் சிறைக் கைதிகள் உற்பத்தி செய்யும் தின்பண்டங்கள், உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் வகையில் அங்காடி ஒன்று நடத்தப்பட்டு வருகின்றன. சிறைத்துறை டிஐஜி பழனி உத்தரவில் கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தகண்ணன் மேற்பார்வையில் அங்காடி நடத்தப்படுகின்றன. தற்போது தீபாவளியை முன்னிட்டு இனிப்பு, கார வகைகளை    சிறைக்கைதிகள் தயார் செய்து சில நாட்களாக விற்பனை செய்து வருகின்றனர். இதில், பாதுஷா, மில்க் பர்பி, மைசூர்பா, ஜிலேபி, லட்டு மற்றும் கார வகைகள் தயாரிக்கப்படுகின்றன. விலை குறைவாகவும், தரமாகவும் இருப்பதால் விற்பனை அமோகமாக நடந்து வருகின்றன. சிறைத்துறை துணை அலுவலர் தாமரைக்கனி, சிறைத்துறை உதவி அலுவலர் பழனி ஏற்பாட்டில் கைதிகள் இனிப்பு, கார வகைகள் தயாரித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/i6RSuAh
via IFTTT