89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பெங்களூருவில் விரைவில் அறிமுகமாகும் இட்லி ஏடிஎம் - 10 நிமிடங்களில் வடை, சட்னியுடன் தயார்!

பெங்களூருவில் விரைவில் அறிமுகமாகும் இட்லி ஏடிஎம் - 10 நிமிடங்களில் வடை, சட்னியுடன் தயார்!

பெங்களூரு: 1949-ம் ஆண்டில் வெளியான 'நல்லதம்பி' படத்தில் 'விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி' என்ற தொலைநோக்கு சிந்தனை மிகுந்த பாடல் இடம் பெற்றிருக்கும். உடுமலை நாராயணகவி எழுதிய அந்தப் பாடலில், “பட்டனை தட்டிவிட்டா ரெண்டு தட்டிலே..இட்டிலியும், காப்பி நம்ம பக்கத்தில் வந்திடணும்” என்ற வரிகளும் இடம்பெற்றிருக்கும். இந்த வரிகள் 70 ஆண்டுகள் கடந்து நிஜமாகி இருக்கிறது!

பெங்களூருவில் 24 மணி நேரமும் சுடச்சுட இட்லி பரிமாறும் வகையில் தானியங்கி இயந்திரம் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. இந்த ரோபோட்டிக் இட்லி இயந்திரம் 10 நிமிடங்களில் வடை மற்றும் இரண்டு வகை சட்னியுடன் இட்லியை பரிமாறுகிறது. இதன் அறிமுக வீடியோ அண்மையில் வெளியாகி சர்வதேச அளவில் வைரலாகியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஃபிரஷ் ஹாட் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், இட்லி தானியங்கி இயந்திரத்தை உருவாக்கி உள்ளது. காபி மெஷினைப் போலவே ஒரு சில நிமிடங்களில் இட்லி, சட்னி, வடை ஆகியவற்றை இந்த இயந்திரம் சுடச்சுட பரிமாறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TQOu1VR
via IFTTT