89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தேர்வில் பார்த்து எழுதுவதைத் தடுக்க நூதன நடவடிக்கை - 'தலைக்கவசத்துடன்' தேர்வெழுதிய மாணவர்கள்

தேர்வில் பார்த்து எழுதுவதைத் தடுக்க நூதன நடவடிக்கை - 'தலைக்கவசத்துடன்' தேர்வெழுதிய மாணவர்கள்

மாணவர்கள் காப்பி அடிப்படைத் தடுக்க வழக்கமாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளைத் தாண்டி, வித்தியாசமான ஒரு முயற்சி பிலிப்பைன்ஸ் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது என்ன என்பதை தற்போது பார்ப்போம்.

மாணவர்களின் உச்சபட்ச கற்பனைத் திறனை வெளிக்கொண்டு வருவதில் தேர்வு அறைகளுக்கு அசாத்தியமான பங்கு உண்டு. சாதாரண வகுப்பறை தேர்வு தொடங்கி பொதுத்தேர்வு வரை இதற்கு விதிவிலக்கில்லை. நான் ரொம்ப 'ஸ்ட்ரிக்ட்' என்னை மீறி நீங்கள் எப்படி பார்த்து எழுதுகிறீர்கள் என்று பார்த்துவிடுவோம் என தேர்வு அறையில் விரைப்பாக வலம் வரும் ஆசிரியர்களின் கண்களில்கூட மண்ணைத் தூவும் மாணவர்கள் இருக்கிறார்கள். காற்றில் கதை பேசி, கைகளில் அபிநயம் பிடித்தேகூட அவர்கள் சக மாணவர்களின் உதவியைப் பெற்றுவிடுவார்கள். தேர்வு அறை காட்சிகள், ஜனரஞ்சகமாக எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு ஈடாக சுவரஸ்யங்கள் நிறைந்தாகவே இருக்கும். நம்ம நாட்டில்தான் இப்படி என்றில்லை; உலகம் முழுக்கவே இப்படித்தான் இருக்கிறது போலும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ogR9av1
via IFTTT