இந்திய தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் வாழ்க்கை அகிம்சையினால் கட்டமைக்கப்பட்டது.
1869 ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். காந்தி தனது பள்ளிப்படிப்பிற்கு பிறகு பாரிஸ்டர் எனப்படும் வழக்கறிஞர் படிப்பை இங்கிலாந்தில் முடித்தார். தென்னாப்பிரிக்காவில் பணியாற்றியபோது இவருக்கு ஏற்பட்ட இனப்பாகுபாடு மற்றும் நிறவெறி பேதம் போன்ற கசப்பான அனுபவங்களே அவர் மாபெரும் அரசியல் சக்தியாக உருவாகக் காரணமாக அமைந்தது. இதுவே அவரை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் தூண்டியதாகவும் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WUMhswr
via IFTTT