89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ‘அன்புள்ள...’ - இதயத்தின் அடியாழம் நனைத்த மந்திரச்சொல்லும் 10 தகவல்களும் @ World Post Day

‘அன்புள்ள...’ - இதயத்தின் அடியாழம் நனைத்த மந்திரச்சொல்லும் 10 தகவல்களும் @ World Post Day

இந்தியாவில் செல்போன் சேவையோ இணையமோ சென்று சேர்ந்திருக்காத ஏதாவது ஒரு குக்கிராமம், மலைகிராமத்தற்கு செல்லும்போதோ, அல்லது நகரத்து தெருக்களில் நடந்து செல்லும்போது அரையாள் உயரத்திற்கு நெற்றியிலிருந்து நீண்ட ஒற்றை இமைக்கு கீழ் வாய் பிளந்திருக்கும் ஒரு சிவப்புநிறப் பெட்டியை பார்த்திருக்க முடியும். நெற்றிப்பொட்டில் இந்தியா போஸ்ட் என எழுதியிருக்கும் அந்தப் பெட்டிக்கு பெயர் தபால் பெட்டி. மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து வெளிறி நிற்கும் அந்த தபால் பெட்டிகளின் நிறத்தை போலவே அதன் வரலாறும் மிக நீண்டது…

நினைத்தால் கணநேரத்தில் மனதின் சலனத்தை, சஞ்சலத்தை சுக துக்கங்களை ஸ்டேட்டஸ்களாக, எஸ்எஸ்எம்-களாக காற்றில் கலந்துவிடும் இன்றைய தலைமுறைக்கு கடிதங்கள் கடத்திய காதலும் வாழ்க்கையையும் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினமே. பாலைவனதேசத்தில் சமையல்காரனாய் இருந்த கணவனுக்கு வீட்டு பசு மாடு கன்று போட்ட செய்தியை மனைவி சொல்வதும், “வீட்டு தலைப்பிள்ள கன்னு போட்டிருக்கா... லட்சுமி வந்திருக்கா” என்ற மனைவியின் வரிகளில் பாலைவன மணல் பரப்பில் பசுமாட்டின் சீம்பால் மணத்தை நுகர்ந்து பார்த்ததையும் கடிதங்கள் மட்டுமே சாத்தியப்படுத்தின.

சாப்பிட்டயா… அப்புறம்… சொல்லு… என அன்பை வார்த்தைகளில் பரிமாறும் ஜாலம் கடிதங்களுக்கு வாய்க்கவே இல்லை. நகர்மயமாதலால் கிராமத்தில் இருந்து பட்டணங்களுக்கு குடிபெயர்ந்து போன மகன் அனுப்பும் பணத்திற்காக காத்திருக்கும் வயது முதிர்ந்த பெற்றோர்களும்… காக்கி உடையில் ஆபத்பாந்தவனாய் வரும் தபால்காரர்கள் கொண்டுவந்து கொடுக்கும் மணியார்டர்களை பெற்றுக் கொண்டு, பதிலுக்கு நீலநிற இன்லேண்ட் லட்டரில் “அன்புள்ள மகனுக்கு அம்மா அப்பாவின் அநேக ஆசிர்வாதங்கள்... நாங்கள் நலம் அங்கு நீ.. மருமகள்.. பேரப்பிள்ளைகள் நலமா? பணம் கிடைத்தது பெற்றுக்கொண்டேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LY3ONwC
via IFTTT