89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பேராசிரியர்களும் சில பேரனுபவங்களும் - ஓர் அனுபவப் பகிர்வு | Teachers' Day Special

பேராசிரியர்களும் சில பேரனுபவங்களும் - ஓர் அனுபவப் பகிர்வு | Teachers' Day Special

தென்மாவட்ட பல்கலை. தொடர்பியல் துறையின் வகுப்பறை அது. ஆய்வு மாணவனாய் இருந்தபோது மலேசியாவில் இருந்து வந்திருந்த ஆசிரியர் ஒருவர் பாடம் தொடர்பியல் கோட்பாடுகளை விளக்கிக் கொண்டிருந்தார். தொடர்பியல் கோட்பாட்டில் மார்க்சிய பார்வைக்கும் ஜெர்மானிய பள்ளியின் பார்வைக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கிய அந்த வெளிநாட்டு ஆசிரியர், “நான் நடத்தியது உங்களுக்கு புரிந்ததா?” என்று தனது உரையை நிறுத்தினார்.

இரண்டு தத்துவ பார்வைகளை எளிமையாக விளங்கிய பரவசத்தை நாங்கள் அனுபவங்களாக பகிர்ந்து கொண்டோம். அனைவரின் மறுமொழியையும் கேட்ட அந்த மலேசிய ஆசிரியர் தனது வகுப்பை இப்படி நிறைவு செய்தார். “நான் நடத்திய பாடம் உங்களுக்கு ஏதாவது வகையில் உதவியிருந்தால், அல்லாவின் உண்டியலில் நான் எனது குழந்தைகளுக்காக கொஞ்சம் புண்ணியம் சேர்த்திருக்கிறேன் என்று அர்த்தம். நாளை நீங்களும் ஆசிரியர்களாகி பாடம் நடத்தும்போது மாணவர்களை மேல ஏற்றி விட்டு கடவுளின் உண்டியலில் உங்கள் குழந்தைகளுக்கான புண்ணியத்தைச் சேமியுங்கள்” என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AbipFGt
via IFTTT