89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பொறியாளர் தினம் | எந்திர லோகத்து படைப்பாளிகளின் சிறப்புகள்

பொறியாளர் தினம் | எந்திர லோகத்து படைப்பாளிகளின் சிறப்புகள்

பேரண்டத்தை வடிவமைத்தது இயற்கை எனும் மகா சக்தியோ அல்லது கடவுளாகவோ கூட இருக்கலாம். ஆனால் இன்றைய நவநாகரிக உலகத்தை கட்டமைத்ததில் பொறியாளர்களின் பங்கு பெரிதினும் பெரிது. அவர்களது பேர் உழைப்புக்கு கிடைத்த பலன் தான் இன்று சாமானிய மக்களின் உள்ளங்கையில் உலகம் அடங்கி உள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு சுற்றுலா செல்ல என்பதில் தொடங்கி சாத்தியமில்லாதவற்றை அறிவியல் துணை கொண்டு சாத்தியமாக்கும் வல்லமையை கொண்டவர்கள் பொறியாளர்கள் தான். ஒரு மலையை சல்லிசல்லியாக உடைத்து மண்ணாக மாற்றுவது. அந்த மண்ணை கொண்டு மாபெரும் கட்டிடங்களை எழுப்புவது. பழைய ஃபேண்டஸி திரைப்படங்களில் வருவது போல தொழில்நுட்பத்தின் துணையோடு கண்டம் விட்டு கண்டம் உள்ள நட்புகளையும், உறவுகளையும் நேருக்கு நேர் அளவளாவ செய்வது என அனைத்திற்கும் பொறியாளர்கள் தான் காரணம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/T4sol1z
via IFTTT