89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மருத்துவ மாணவர்களின் மன அழுத்தம் போக்க ‘மனநல நல்லாதரவு மன்றம்’ - மதுரை அரசு மருத்துக் கல்லூரி முன்முயற்சி

மருத்துவ மாணவர்களின் மன அழுத்தம் போக்க ‘மனநல நல்லாதரவு மன்றம்’ - மதுரை அரசு மருத்துக் கல்லூரி முன்முயற்சி

மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கவும், மன அழுதத்தால் ஏற்படும் தற்கொலை எண்ணத்தை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து தடுப்பதற்காகவும் ‘மனநல நல்லாதரவு மன்றம்’ தொடங்கப்பட்டுள்ளது.

பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளில் உள்ள 75 முதல் 95 சதவீதம் பேர் மனநலம் தொடர்பான சேவைகளை அணுக முடிவதில்லை என உலக மனநல கூட்டமைப்பு தெரிவிக்கிறது. அதனால், மனச்சிதைவு, மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற முடியாமல் தவிக்கிறார்கள். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க முடியாமல், கல்வி பயில முடியாமல் தங்களுக்கு என்ன பிரச்னை என்பதை உணர முடியாமல் மன அழுத்தத்துடன் சிரமப்படுகின்றனர். சமீப காலமாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் படிக்கும் மாணவர்கள், வகுப்பறை கல்வி முதல் அரசு மருத்துவமனை மருத்துவப் பணிகள் வரை அவர்கள் மன அழுத்ததிற்கு ஆளாகுவதாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3b4QWck
via IFTTT