ஒரத்தநாட்டில் 200 ஆண்டுகள் பழமையான மிகப் பெரிய சத்திரம் உள்ளது. சத்திரத்தோடு, கோயில், குளம், கல்விக்கூடம், மருத்துவமனை என்று ஒரே சமயத்தில் 5,000 பேர் தங்கக்கூடிய பிரம்மாண்டமான மாளிகை தான் முத்தம்மாள் சத்திரம். யார் இந்த முத்தம்மாள்?
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களில் புகழ்பெற்றவர் இரண்டாம் சரபோஜி மன்னர். பன்முக ஆளுமையும் ஆற்றலும் திறமையும் கொண்ட சரபோஜி மன்னர், அறிவுப் பசிக்கு சரஸ்வதி மகால் நூலகத்தை விரிவுபடுத்தியது போல், பசிப்பிணி தீர்க்கவும், உடற்பிணி நீக்கவும், கல்விப் பணியாற்றவும் உருவாக்கிய சத்திர தர்மங்களுள் ஒன்று தான் முத்தம்மாள் சத்திரம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6eMZy3W
via IFTTT