89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 'இயற்கை விவசாயத்தில் வருவாய் ஈட்டலாம்' - எளிய யோசனைகள் சொல்லும் விவசாயி கருணாகரன்

'இயற்கை விவசாயத்தில் வருவாய் ஈட்டலாம்' - எளிய யோசனைகள் சொல்லும் விவசாயி கருணாகரன்

மதுரை: ரசாயன உரங்களுக்கு செலவு செய்யமுடியாமல் பணத்தை மிச்சப்படுத்தும் வகையில் இயற்கை முறை விவசாயத்திற்கு மாறிய செல்லம்பட்டி விவசாயி அதன்மூலம் வருவாய் ஈட்டுகிறார். மேலும், இயற்கை முறையில் விளைந்த விளை பொருட்கள் உண்பதையே வாழ்க்கை முறையாக்கியுள்ளார்.

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி அருகே சக்கரைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி என்.கருணாகரன் என்ற அலெக்ஸ் (வயது 50). இவர் தனக்கு சொந்தமான கிணற்றுடன் கூடிய 3 ஏக்கர் நிலத்தில் ரசாயன உரங்களிட்டு நெல், காய்கறிப் பயிர்கள் செய்தார். இதில் ரசாயன உரங்கள், இடுபொருட்களுக்கு செலவு செய்ய முடியாமல் இயற்கை விவசாய முறைக்கு மாறினார். பணச் செலவின்றி இயற்கை முறையில் விவசாயம் செய்து வருவாய் ஈட்டி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wOdCXSZ
via IFTTT