அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் 12-ம் நாளில் அத்தி வரதர் காவிப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தினருடன் அத்தி வரதரை தரிசனம் செய்தார். அவருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், காஞ்சி மாவட்ட ஆட்சியர் பொன்னையா உடன் வந்தனர்.
குடியரசுத் தலைவர் பன்வாரிலால் புரோஹித் காஞ்சிபுரம் வந்து அத்தி வரதரை தரிசனம் செய்ய இருப்பதாக மாவட்ட நிர்வாகம் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. இதன்படி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விமானம் மூலம் புதுதில்லியில் இருந்து சென்னை வந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் வந்தார். இவரது ஹெலிகாப்டர் வரதராஜபெருமாள் கோயில் அருகே உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் உள்ள இறங்கு தளத்தில் இறக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gzwTt48
via IFTTT