ஸ்ரீநகர்: ஹஜ் புனித பயணம் சென்று காஷ்மீர் திரும்பிய முதல் பகுதி இஸ்லாமியர்களுக்கு காஷ்மீர் பண்டிட்டுகள் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காஷ்மீரில் நீண்டகாலமாக பின்பற்றப்பட்டுவரும் பராம்பரிய பழக்கங்களுள் ஒன்று, ஹஜ் புனித பயணம் சென்று திரும்பும் புனித பயணிகளுக்கு காஷ்மீர் பண்டிட்டுகள் வரவேற்பு அளிப்பது. இணைந்து வாழ்வதையும் சகோதரத்துவத்தையும் காக்கும் வகையில் பின்பற்றப்படும் இந்த பாரம்பரிய வரவேற்பு நிகழ்ச்சி ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சனிக்கிழமை நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/talYDvS
via IFTTT