89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் - கடும் கூட்ட நெரிசலால் பக்தர்கள் பெரும் அவதி

அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் - கடும் கூட்ட நெரிசலால் பக்தர்கள் பெரும் அவதி

அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் 18-ம் நாளில் அத்தி வரதர் கத்தரிப்பூ நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

முதியோர் செல்லும் வரிசையில் அதிக அளவு முதியோர், மாற்றுத் திறனாளிகள் திரண்டுள்ளதால் அதிலும் பெரும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக எண்ணிக்கையில் முதியோர் சாலைகளில் வரிசையில் நின்றதால் கிழக்கு கோபுரம் பகுதியின் அருகே காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முதியோர் வரிசையில் சென்றவர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்ய 3 மணி நேரம் காத்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MSmFpYz
via IFTTT