அத்தி வரதர் எழுந்தருளும் விழாவான 2-வது நாளில் அத்தி வரதர் நீலப்பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார். ரூ.50 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் அனைத்து பக்தர்களும் பொது தரிசன வரிசையில் நின்றே அத்தி வரதரை தரிசித்தனர்.
கிழக்கு கோபுர வாசல் வழியாகச் சென்ற பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்து விட்டு மேற்கு கோபுர வாசல் வழியாக வெளியேறினர். அத்தி வரதரை காண்பதற்கு 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை வரிசையில் நின்றதாக பக்தர்கள் தெரிவித்தனர். கோயில் பிரகாரத்தைச் சுற்றி வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/f2IkSnE
via IFTTT