89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : அத்தி வரதர் வைபவம் - 2019 

அத்தி வரதர் வைபவம் - 2019 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கியது. இதற்காக, 20 அடி ஆழமும், 2.50 ஏக்கர் பரப்பளவு கொண்ட அனந்த சரஸ் புஷ்கரணி தீர்த்த குளத்தில் 40 ஆண்டுகளாக வாசம் செய்து வந்த அத்திவரதரை வெளியே எடுப்பதற்காக, குளத்தில் இருந்த தண்ணீர், மின்மோட்டார்கள் மூலம் கிழக்கு ராஜகோபுரம் அருகே உள்ள பொற்றாமரை குளத்துக்கு மாற்றப்பட்டது. அதில், வளர்ந்த மீன்களும் பாதுகாப்பான முறையில் அக்குளத்துக்கு மாற்றப்பட்டன.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் 40 ஆண்டுகளாக நீருக்குள் இருந்த அத்தி வரதர் ஜூன் 28-ம் தேதி வெளியில் எடுக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் உள்ள நீர் வடிவதற்காக வசந்த மண்டபத்தில் வைத்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2hacT6K
via IFTTT