மதுரை: மதுரை மத்திய சிறையிலுள்ள பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதி அமுதச்செல்வி பிளஸ் 1 தேர்வில் 600-க்கு 557 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்தார். இவரை சிறைத் துறை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.
சமீப காலங்களாக தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு, தண்டனைக்கு உள்ளாகும் கைதிகளின் கல்வி விருப்பம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மத்திய சிறையிலும் விருப்பத்திற்கேற்ப, பள்ளிக்கல்வி, உயர் கல்வி கற்க தேவையான ஏற்பாடுகளை சிறைத் துறை நிர்வாகம் செய்கிறது. இதன்படி, அந்தந்த கல்வியாண்டில் நடக்கும் பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்-2 தேர்வுகளை எழுதுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ouHrA9Y
via IFTTT