89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : அத்தி வரதரை தரிசிக்க நேரம் நீட்டிப்பு: இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி

அத்தி வரதரை தரிசிக்க நேரம் நீட்டிப்பு: இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி

அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் ஒன்பதாம் நாளில் மஞ்சள்(வெளிர்) நிற பட்டாடையில் அத்தி வரதர் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்.

நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனம் என்று இருந்தது. பின்னர் அது காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை என்று மாற்றப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் தற்போது காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை என்று மாற்றப்பட்டுள்ளது.

முதியோர், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோர் இந்த கூட்டத்துக்குள் சென்று கிழக்கு கோபுர வாசலை அடையமுடியவில்லை. அங்கிருந்துதான் வீல் சேர், மற்றும் பேட்டரி கார் வசதிகள் உள்ளன. இவர்களின் வசதிக்காக கிழக்கு மாட வீதி மற்றும் வடக்கு மாட வீதி சந்திப்பிலும், சேதுராயர் தெரு நுழைவு வாயிலிலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு வந்தால் அவர்கள் வீல் சேர் மூலம் அழைத்துச் செல்லப்படுவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PLaEXyC
via IFTTT