89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : அழியும் நிலையிலுள்ள நாட்டு நாய்களுக்கு அடைக்கலம்: பண்ணை அமைத்து பாதுகாக்கும் உசிலம்பட்டி பொறியாளர்

அழியும் நிலையிலுள்ள நாட்டு நாய்களுக்கு அடைக்கலம்: பண்ணை அமைத்து பாதுகாக்கும் உசிலம்பட்டி பொறியாளர்

அழியும் நிலையிலுள்ள நாட்டு நாய்களைப் பண்ணை அமைத்து பாதுகாத்து வருகிறார் உசிலம் பட்டியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர். வெளிநாட்டு நாய்களுக்கு இணையாக நாட்டு நாய்களையும் வணிக நோக்கோடு தரப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள போத்தம்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ் (38). மென்பொருள் பொறியாளரான இவர் நாட்டு நாய்களுக்கென பண்ணை அமைத்து 110 நாய்களுக்கு மேல் வளர்த்து விற்பனை செய்து வருகிறார். வெளிநாட்டு நாய்களை இங்குள்ளோர் வளர்ப்பதுபோல் நமது பாரம் பரிய நாட்டு நாய்களையும் வெளிநாட்டுக்காரர்கள் விரும்பி வளர்க்கும் வகையில் சர்வதேச அளவில் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NvzGwiY
via IFTTT