89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : நாளை முதல் 14-ம் தேதி வரை பத்மாவதி தாயார் கோயில் தெப்போற்சவம்

நாளை முதல் 14-ம் தேதி வரை பத்மாவதி தாயார் கோயில் தெப்போற்சவம்

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் தெப்போற்சவம் ஜூன் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

திருப்பதியை அடுத்துள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தெப்பத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக தெப்பத் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு தெப்பத் திருவிழாவை வரும் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை வெகு விமரிசையாக நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dhGc6OI
via IFTTT