பொது மருத்துவர் ஒருவர் தனது நோயாளிகளைப் போல தானும் நோய் பாதிப்புக்குள்ளாவது சாதாரணமான ஒன்று. மருத்துவராக இருந்தாலும் அவரும் நோய்த் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது. அப்படி பாதிப்புக்குள்ளாகும்போது அம்மருத்துவர்கள் தயங்காமல் பாதிப்பை வெளிப்படுத்தி சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். இந்த வாய்ப்பு எல்லா வகையான மருத்துவர்களுக்கும் எளிதாக கிடைப்பதில்லை. குறிப்பாக, உளவியல் மருத்துவர் ஒருவர் தனது மனநல பாதிப்புகளை வெளிப்படையாக வெளியில் சொல்ல முடியுமா? உளவியலாளர் ஒருவர் மனநல பாதிப்புக்குள்ளாகும்போது அவர் என்ன செய்வார்? - இந்த மில்லியன் டாலர் கேள்விக்கான பதில், 'அவர் மவுனமாக இருந்து விடுவார்' என்பதே!
காரணம், மிகவும் எளிதானது. உளவியலாளர் ஒருவர் தனது மனநல பாதிப்புகளை குறித்து வெளிப்படையாக பேசும்போது, அவரது பணி எதிர்காலம் பாதிக்கப்படும் என்பது பொதுக் கருத்தாக உள்ளது. ஆனால், உளவியளார்கள் சொந்த மனநல பாதிப்பு பற்றி வெளிப்படையாகப் பேசுவது, இந்த மூடநம்பிக்கையைக் குறைக்கவும், மற்றவர்கள் பயன் பெறவும் உதவும் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதற்கு முன்பு உளவியலாளர்களுக்கு மனநல பாதிப்பு ஏற்பாடுமா என்ற கேள்வி எழும். உளவியலாளர்களும் மனிதர்கள்தான் அவர்களும் மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று 'தி கான்வெர்சேஷன்' தளத்தில் விவரித்திருக்கிறார்கள், தென் புளோரிடா பல்கலைக்கழகத்தில், மருத்துவ உளவியலில் முனைவர் பட்டம் பெற்ற ஆண்ட்ரூ டெவெண்டோர்ஃப், டெக்சாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மருத்துவ உளவியல் உதவிப் பேராசிரியர் சாரா விக்டர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/n3dliyD
via IFTTT