சென்னை: இணையதளங்களுக்கும், ஆன்லைன் கேம்களுக்கும் அடிமையான 100-க்கும் மேற்பட்டவர்களை, அந்தப் பாதிப்பிலிருந்து மீட்டுள்ளனர் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள். இவர்களில் சிறுவர்களுடம் அடங்குவர். இது எப்படி சாத்தியமானது? - இதோ ஓர் உதாரண நிகழ்வு...
சென்னையைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். கரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொண்ட பிறகு, நிறைய நேரம் ஆன்லைன் விளையாட்டுகளை அவர் விளையாடத் தொடங்கினார். அசாதாரண கை அசைவுகள், மொபைல் கேம்களை விளையாடுவதற்கு இரவு வெகுநேரம் விழித்திருப்பது, கல்வியில் ஆர்வமின்மை மற்றும் தேர்வு எழுத ஆர்வமின்மை போன்ற பிரச்சினைகளுடன் அவர் தனது தாயாரால் அழைத்து வரப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DKLNjsE
via IFTTT