திருமணமான பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு 82 சதவீதம் கணவன்மார்தான் காரணம் எனத் தேசியக் குடும்ப நல ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் திருமணமாகாத பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் உறவினர்களால்தான் (39.3%) நடக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உறவினர்களுக்கு அடுத்தபடியாக ஆண் நண்பர்களும் (16.1) குடும்ப நண்பர்களும் (11.7) திருமணமாகாத பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்குப் பொறுப்பாகிறார்கள் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தியாவில் குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்களில் 77 சதவீதம்பேர் அதைப் பற்றி வாய் திறப்பதே இல்லை. அதைச் சகித்துக்கொண்டுதான் வாழ்கிறார்கள். அதுபோல் உடல் ரீதியில் பாலியல் ரீதியில் குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்களில் வெறும் 14 சதவீத்தினர் மட்டுமே வெளி உதவியை நாடுகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 77 சதவீதம் பெண்கள் தனக்கு நிகழும் கொடுமைகள் பற்றி வாய் திறப்பதே இல்லை என அந்த அறிக்கை கூறுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ayLBz5K
via IFTTT