ஒவ்வோர் ஆண்டும் மே 8-ம் தேதி சர்வதேச தலசீமியா (ரத்த சிவப்பணுக்களை தொடர்ந்து அழிக்கும் நோய்) தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகெங்கும் 1.50 சதவீதம் பேருக்கு தலசீமியா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் 1.50 லட்சம் குழந்தைகள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கோவை அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது: தலசீமியா என்பது ரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்களில் ஏற்படும் மரபணு மாற்றம் ஆகும். இதனால் ஒருவகை ரத்தசோகை ஏற்படும். ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் உள்ள ஹீமோ குளோபின் இந்த மரபணு மாற்றத்தால் உருமாறுகிறது. இவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைக்கு, பெரும்பாலும் பிறந்த இரண்டு வயதுக்குள் ரத்தசோகை கண்டறியப்படுகிறது. முடிந்தவரை நோயை விரைவாக கண்டறிந்து குழந்தைக்கு சிகிச்சை அளிப்பது அவசியம். கர்ப்பத்துக்குள் இருக்கும் குழந்தைக்கு தலசீமியா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய முடியும். நெருங்கிய சொந்தத்துக்குள் திருமணம் செய்பவர்களின் வாரிசுகளுக்கு இந்நோய் அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DICnG0k
via IFTTT