89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மே 8 - அன்னையர் தினத்தை நித்தமும் கொண்டாடுவோம்

மே 8 - அன்னையர் தினத்தை நித்தமும் கொண்டாடுவோம்

காலத்தைக் கொண்டாட என ஒரு நாளைக் குறிப்பது எவ்வளவு அபத்தமோ, அதே போன்ற அபத்தமே அன்னையரைக் கொண்டாட என ஒரு தினத்தைத் தனியே ஒதுக்குவது. நம் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியிலும் அவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். போற்றப்பட வேண்டியவர்கள். நமக்கான உலகைச் சுமந்தவர்கள் / சுமப்பவர்கள் / சுமக்கப் போகிறவர்கள் அவர்கள்.

நமக்கும் அன்னைக்குமான உறவு இவ்வுலகை நாம் பார்க்கும் முன்னரே தொடங்கிவிடுகிறது. சொல்லப்போனால், நாம் உருப்பெறும் முன்னரே தொடங்கிவிடுகிறது. மசக்கையில் வாடி வதங்கும்போதும் நமக்காக / நம் நலனுக்காக என வலுக்கட்டாயமாகச் சாப்பிடுவதில் தொடங்குகிறது அவர்களின் அன்பு. அதிர்ந்து நடக்காமல், குப்புறப் படுக்காமல், நம்மை வயிற்றில் சுமந்தபடி திரிவதில் தொடங்குகிறது அவர்களின் தியாகம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4goiWM8
via IFTTT