காலத்தைக் கொண்டாட என ஒரு நாளைக் குறிப்பது எவ்வளவு அபத்தமோ, அதே போன்ற அபத்தமே அன்னையரைக் கொண்டாட என ஒரு தினத்தைத் தனியே ஒதுக்குவது. நம் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியிலும் அவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். போற்றப்பட வேண்டியவர்கள். நமக்கான உலகைச் சுமந்தவர்கள் / சுமப்பவர்கள் / சுமக்கப் போகிறவர்கள் அவர்கள்.
நமக்கும் அன்னைக்குமான உறவு இவ்வுலகை நாம் பார்க்கும் முன்னரே தொடங்கிவிடுகிறது. சொல்லப்போனால், நாம் உருப்பெறும் முன்னரே தொடங்கிவிடுகிறது. மசக்கையில் வாடி வதங்கும்போதும் நமக்காக / நம் நலனுக்காக என வலுக்கட்டாயமாகச் சாப்பிடுவதில் தொடங்குகிறது அவர்களின் அன்பு. அதிர்ந்து நடக்காமல், குப்புறப் படுக்காமல், நம்மை வயிற்றில் சுமந்தபடி திரிவதில் தொடங்குகிறது அவர்களின் தியாகம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4goiWM8
via IFTTT