89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சோழர்களின் பெருமையைப் பறைசாற்றும் ஆா். மணிவண்ணனின் ஒளிப்படக் கண்காட்சி

சோழர்களின் பெருமையைப் பறைசாற்றும் ஆா். மணிவண்ணனின் ஒளிப்படக் கண்காட்சி

தஞ்சாவூரைச் சேர்ந்த ஆர். மணிவண்ணன் பயண ஒளிப்படக் கலைஞர். பாரம்பரியத்தைத் தேடிச் செல்லும் அவருடைய பயணங்கள், நம்முடைய கலாச்சாரத்தின் பெருமையை அறிந்துகொள்ள உதவுகின்றன. அந்தப் பயணங்களில் அவர் எடுக்கும் ஒளிப்படங்கள், நம்முடைய கலாச்சாரத்தின் பெருமைமிகு கூறுகளை வரலாற்றில் நிலைக்கச் செய்யும் விதமாக இருக்கின்றன.

தன்னுடைய பயண அனுபவங்களை ஒளிப்படக் கண்காட்சிகளின் மூலமாக மக்களிடம் எடுத்துச் செல்வது அவருடைய வழக்கம். கடந்த ஆண்டு மார்ச் மாதம் தஞ்சாவூரில் ’முகத்தின் குரல் - நாகாஸ்’ என்கிற பெயரில் அவர் ஒளிப்படக் கண்காட்சி நடத்தினார். அந்தக் கண்காட்சி நாகாலாந்து பழங்குடி மக்களின் கலாச்சாரம், எளிமையான வாழ்க்கை முறை, உணவு முறை, வண்ணமயமான உடைகள், திருவிழா கொண்டாட்டங்கள் போன்றவற்றை அறிமுகப்படுத்தின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/F4r1Sla
via IFTTT