89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த பழங்கள் வாங்கினால் புத்தகம் இலவசமாக வழங்கும் பழ வியாபாரி

வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த பழங்கள் வாங்கினால் புத்தகம் இலவசமாக வழங்கும் பழ வியாபாரி

தஞ்சாவூர்: புத்தகம் வாசிப்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும் இக்காலகட்டத்தில், வளரும் தலைமுறையினரிடம் வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக கடந்த 9 ஆண்டுகளாக தனது கடையில் பழங்கள் வாங்கும் அனைவருக்கும் ஏதோ ஒரு புத்தகத்தை இலவசமாக வழங்கி வருகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த பழ வியாபாரி.

தஞ்சாவூர் பூக்கார தெருவில் சுப்பிரமணியர் கோயில் எதிரே வசித்து வருபவர் என்.காஜாமொய்தீன்(63). இவர், தன்னுடைய வீட்டின் முன்பக்கத்தில் பழக்கடை நடத்தி வருகிறார். கம்யூனிஸ்ட் கொள்கையில் ஈர்க்கப்பட்டவர் என்பதால், எல்லோரும் இவரை தோழர் எனவும், இவரது கடையை தோழர் பழக்கடை எனவும் அழைத்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zFTwE6C
via IFTTT