"மன அழுத்தம் என்பது மனிதனுக்கு இயல்பான ஒன்றுதான். மனிதனுக்கு உணர்ச்சிகள் அதிகமாவதும், ஒரு சில நேரங்களில் உணர்ச்சியற்று இருப்பதும் பொதுவான ஒன்று. மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தம் என்பது பல காரணங்களால் ஏற்படும். சுற்றுப்புறத்தில் இருந்து வரலாம், நம் உடலில் இருந்தே வரலாம், நம் சிந்தனையில் இருந்து மன அழுத்தம் வரலாம். தேர்வு நேரத்தில் ஒரு பதற்றம் இருந்துகொண்டே இருக்கும், அது மன அழுத்தமாக மாறலாம். நாம் அனைவராலும் மன அழுத்ததை மிகச் சுலபமாக வெல்ல முடியும்" என்கிறார் மனநல மருத்துவர் செல்வராஜ், மேலும், அவர் மன அழுத்ததின்போது, நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என தெளிவாகக் கூறியுள்ளார்.
"முதலில் அனைவரும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நாம் மன அழுத்தத்தை ஒரு பாசிடிவ் பொருளாக பார்க்க வேண்டும். மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது, ஒரு விஷயத்தைக் குறித்து பதற்றப்படும்போதுதான் மன அழுத்தம் பெறுகிறது. எனவே, நமக்கு இது ஓர் அலர்ட் என கருதி, எதைக் குறித்து நாம் பயப்படுகிறோமோ, எதைக் குறித்து பதற்றப்படுகிறோமோ, அதை எப்படி சரி செய்வது, எப்படி அதில் வெற்றியடைவது என அதிக கவனம் செலுத்த வேண்டும். முடிந்த அளவு மன அழுத்தம் ஏற்படாதவாறு சிந்தனையை பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படியே குழப்பம் ஏற்பட்டாலும், இது 'பாசிடிவ் மோட்' தான் என சொல்லிக்கொண்டு வேலையை தொடர வேண்டும். ஏனென்றால், மன அழுத்தத்தால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றங்கள் பாதிப்பாகவும் மாறும்'' என்றவர், மாற்றங்களை பின்வருமாறு விவரித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IjCvafZ
via IFTTT