உலகின் பல்வேறு பழக்கவழக்கங்களை கோவிட் பெருந்தொற்று மாற்றியுள்ளது. பல புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. பெருந்தொற்றின் மூன்று அலைகளாலும் பாதிக்கப்பட்டு, இறந்தவர்களின் எண்ணிக்கை 61 லட்சத்தைக் கடந்துவிட்டது. உண்மையில் இந்த மரணங்களின் எண்ணிக்கைகள் மனிதர்களுக்கு எதை உணர்த்துகின்றன. மனித மூளை அவற்றை எவ்வாறு புரிந்து கொள்கிறது. கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.
கரோனா பெருந்தொற்றுக் காரணமாக உலக அளவில் இதுவரை, 6.41 மில்லியன் - அதாவது 60 லட்சத்து 41 ஆயிரம் (2022 மார்ச் 31 நிலவரப்படி) மக்கள் மரணமடைந்திருக்கிறார்கள். உண்மையில் பெரும்பாலானா மக்களால் இந்த எண்ணிக்கையை காட்சிப்படுத்திப் பார்ப்பது என்பது முடியாத காரியம். ஏனெனில், அவ்வளவு பெரிய எண்களைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு மனித மூளை வடிவமைக்கப்படவில்லை. மனித மூளை, எண்களை எவ்வாறு புரிந்து கொள்கிறது என்பது குறித்து உலக அளவில் இன்னும் பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இருந்த போதிலும், மனிதர்கள் அதிக அளவிலான எண்களை கையாளுவதில் சிக்கலைச் சந்திக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. ஒவ்வொரு நாட்டிலும் கோவிட் - 19 அலைகள் அதன் உச்சத்தில் இருந்தபோது, தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் மரணமடைந்தார்கள். அந்த ஆயிரக்கணக்கான என்ற எண்ணிக்கையை மனிதர்கள் எவ்வாறு புரிந்துகொண்டிருப்பார்கள் என்ற கேள்வி எழும் நிலையில், மில்லியன் என்ற எண்ணிக்கையை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/w6YEvPg
via IFTTT