89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : காரடையான் நோன்பு நேரம்!  கணவரின் ஆயுள் நீடிக்கும்; தாலி பாக்கியம் நிலைக்கும்! 

காரடையான் நோன்பு நேரம்!  கணவரின் ஆயுள் நீடிக்கும்; தாலி பாக்கியம் நிலைக்கும்! 

கணவர் சத்தியவானின் ஆயுசு முடிந்து, எமனுடன் போராடிய சாவித்திரியின் சரிதம் தெரியும்தானே உங்களுக்கு? யமனுடன் போராடி, கணவரின் உயிரை மீட்டெடுத்தாள். மேலும் சாவித்திரியின் மாமியார், மாமனாருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைத்தது.. யம தர்மனுக்கு ஆத்மார்த்தமாக நன்றி தெரிவித்தாள் சாவித்திரி. அன்றைய விரதத்துடன், பூஜையுடன் நைவேத்தியம் செய்ய நினைத்தாள்.

வீட்டில் இருந்த கார் அரிசியையும், காராமணியையும் கொண்டு இனிப்பு அடையும் உப்பு அடையும் செய்தாள். கடைந்த வெண்ணெய் உருகாமல் இருந்தது. நுனி வாழை இலையில் அவற்றை வைத்து, ’ஓரடைய நோன்பும், உருக்காத வெண்ணெயும் படைக்கிறேன். ஒருக்காலும் என் கணவன் என்னைப் பிரியாமல் இருக்க வேண்டும்’ என்று கண்ணீர் மல்க வேண்டினாள். நைவேத்யம் செய்தாள். பிரசாதத்தை அனைவருக்கும் வழங்கினாள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vcnaHn
via IFTTT