திருமணமாகி, கணவனுடன் அற்புதமாக வாழும் சுமங்கலிகள் மட்டுமின்றி கன்னிப்பெண்களும் காரடையான் நோன்பு பூஜையை மேற்கொள்ளலாம். கணவர் ஆயுளுடன் இருக்க வேண்டும், நாம் தீர்க்கசுமங்கலியாக வாழவேண்டும் என்று திருமணமான பெண்கள் வேண்டிக்கொண்டு, பிரார்த்தனை செய்து கொண்டு இந்த பூஜையை செய்யலாம். அதேசமயம், நல்ல அன்பான, ஒழுக்கமான, பண்பு மிக்க கணவன் கிடைக்கவேண்டும் என்று கன்னியர் இந்த பூஜையை மேற்கொள்ளலாம் என்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்.
எமனிடம் சாவித்திரி மூன்று வரங்கள் கேட்டாள். அந்த வரங்கள் ஒவ்வொன்றும் புகுந்த வீட்டுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் கணவருக்கு கெளரவமும் வாழ்க்கையும் தரும் விதமாகவும் அமைந்தன என்று சத்தியவான் சாவித்திரியின் சரிதம் விளக்குகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rIBPaV
via IFTTT