89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மாசி சங்கடஹர சதுர்த்தியில் ஆனைமுக தரிசனம்

மாசி சங்கடஹர சதுர்த்தியில் ஆனைமுக தரிசனம்

மாசி சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், ஆனைமுகனைத் தரிசிப்போம். அருகம்புல் மாலை சார்த்தி மனதார வேண்டுவோம். மங்கல காரியங்களை நடத்தித் தருவார். மாங்கல்ய பலம் தந்திடுவார். மங்காத செல்வத்தை வழங்கிடுவார், பிள்ளையாரப்பன்.

எத்தனையோ தெய்வங்கள் உண்டு. அந்த தெய்வங்களை வணங்குவதற்கு பலப்பல வழிபாடுகள், முறைகள், நியமங்கள் இருக்கின்றன. அதேசமயம் எந்த தெய்வத்தை வணங்கினாலும் அப்படி வணங்கும் போது, முதலில் பிள்ளையாரை வழிபடவேண்டும் என்கிறது சாஸ்திரம்.
அதனால்தான் விநாயகப் பெருமானை, முழுமுதற் கடவுள் என்று போற்றுகிறோம். வணங்குகிறோம். ஆலயங்களின் ஆகமப்படியும் கோயில்களில், முதலில் விநாயகரை வழிபட்டுவிட்டு அடுத்தடுத்த தெய்வங்களை வணங்குவதற்கு சந்நிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அதேபோல், சாஸ்திர ரீதியாகவும் எந்த ஹோமங்கள் யாகங்கள் செய்தாலும், முதலில் பிள்ளையாருக்கு உண்டான வழிபாட்டைச் செய்துவிட்டுத்தான் அடுத்தடுத்த பூஜைகளை மேற்கொள்ளவேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bQMZUz
via IFTTT