மாசி செவ்வாய்க்கிழமையில், முருகப்பெருமானை வழிபடுங்கள். துர்கையைத் தரிசியுங்கள். துர்கை தீயசக்திகளை விரட்டுவாள். கந்தன் கவலைகளெல்லாம் பறந்தோடச் செய்வான். திருச்செந்தூர் முதலான அறுபடைவீடுகளிலும் மற்றும் உள்ள முருகப்பெருமான் கோயில்களிலும் காலையும் மாலையும் இரண்டு வேளையும் சிறப்பு பரிகார பூஜைகள் நடத்தப்படுகின்றன. இதில் கலந்து கொண்டு, மயில்வாகனனை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும்!
பொதுவாகவே, செவ்வாய்க்கிழமை என்பது முருகப்பெருமானுக்கும் உகந்தது. அம்பாள் வழிபாட்டுக்கும் அருமையான நாள்! எந்த மாதமாக இருந்தாலும் எந்த செவ்வாய்க்கிழமையாக இருந்தாலும் முருக வழிபாட்டுக்கும் அம்பாள் வழிபாட்டுக்கும் உரிய அற்புதமான நாள். செவ்வாய்க்கிழமைகளில், இவர்களைத் தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் ஆலயங்களுக்கு வருவார்கள். அழகன் முருகனைத் தரிசித்துச் செல்வார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kg5pll
via IFTTT