உடுமலை மாரியம்மன், ஊரையும் எங்களையும் காத்தருளும் காவல்தெய்வம் எனப் போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள். குடும்பப் பிரச்சினையால் இல்லத்தில் நிம்மதி இல்லை என்று கலங்குபவர்கள், கருத்து வேற்றுமையால் பிரிந்த தம்பதியர், தீயசக்திகளின் ஆதிக்கத்தால் மனக்கிலேசத்துடன் இருப்பவர்கள், உடுமலைபேட்டை நாயகியை, மாரியம்மனை வழிபட்டால் போதும்... விரைவில் தீயவை விலகும். தடைப்பட்ட மங்கல காரியங்கள் வீட்டில் நிகழும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கை.
பழநியை அடுத்து உள்ளது உடுமலைபேட்டை. பொள்ளாச்சிக்கும் அருகில் அமைந்திருக்கிறது இந்த ஊர். உடுமலைப்பேட்டை நகரில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில், கிழக்கு நோக்கியபடி அற்புதமாகக் காட்சி தருகிறாள் ஸ்ரீமாரியம்மன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pO02ea
via IFTTT